×

சாயா கிரக நாடி முற்றும்! இடைகாலில் ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

கடையநல்லூர்,செப்.25: கடையநல்லூரை அடுத்த இடைகாலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செங்கோட்டை வட்டார கிளைக்கான தேர்தல் நடந்தது. இதனை ஆணையாளர்களாக ராஜ்குமார், அருள் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்.

செங்கோட்டை வட்டாரத்தலைவராக அய்யப்பன், வட்டாரச்செயலாளராக ரவிச்சந்திரன், வட்டார பொருளாளராக செல்வி, துணைத்தலைவர்களாக சத்தியகுமார், துரைராஜ், செண்பகவல்லி, துணைச் செயலாளர்களாக டேவிட்ஞானராஜ், சீலன்ஜெயக்குமார், மகாலட்சுமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக முருகன், சிவராமன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய பொறுப்பாளர்களுக்கு வட்டார தலைவர் அய்யப்பன் பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்தார். செங்கோட்டை வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆய்க்குடி அரசு ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியர் டேவிட் ஞானராஜ்க்கு செங்கோட்டை வட்டார கிளையின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

The post சாயா கிரக நாடி முற்றும்! இடைகாலில் ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Alliance ,Kadayanallur ,Sengota ,Tamil Nadu Primary School Teachers Alliance ,Dinakaran ,
× RELATED ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப்...