×

அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள்

அரியலூர், செப்.24: மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 50 அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன.
இதில், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற கலைப் போட்டிகளை பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா தொடக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதே போல் மாவட்டத்தில் பெரும்பாலன அரசுப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Ariyalur District ,Ariyalur ,Chief Minister ,Dr. ,Karunanidhi ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...