×

எந்த ஆவணங்களும் இல்லாமல் அரசு தரிசு நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா போட்டு தந்த கோட்டாட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: எந்த ஆவணங்களும் இல்லாமல் அரசு தரிசு நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா போட்டு தந்த கோட்டாட்சியர் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரை 26ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலம்பநாதன் பேட்டை ஊராட்சி தலைவர் தெய்வானை சிங்காரவேலு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டது. 186 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை, ஒப்புதலின்றி நஞ்சை நிலமாக வகை மாற்றி தனி நபர்களுக்கு பட்டா பதிவு செய்துள்ளார் என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post எந்த ஆவணங்களும் இல்லாமல் அரசு தரிசு நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா போட்டு தந்த கோட்டாட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Kotatsiyar ,CHENNAI ,Kottaksi ,Dinakaran ,
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...