×

நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியை திரிபுரா மாநில போலீசார் கைது

அகர்தலா : நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியை திரிபுரா மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த போது, அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் எமெர்ஜெண்சி கதவின் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென அந்த கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அவரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

தொடர்ந்து அங்கு வந்த பணிப்பெண்கள், அவரை வேறு இருக்கைக்கு மாற்றி அமர வைத்தனர். இந்த நிலையில், விமானம் அகர்தலா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பயணி, விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது பெயர் பிஸ்வஜித் தேவ்நாத் என்றும் போதை மாத்திரைகளை உட்கொண்டு இருந்ததால் எமெர்ஜென்சி கதவை திறக்க முயன்றதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே இந்த சம்பவத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என இண்டிகோ விமான நிலையம் தெரிவித்துள்ளது.

The post நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியை திரிபுரா மாநில போலீசார் கைது appeared first on Dinakaran.

Tags : Tripura ,state police ,Agartala ,Assam ,Tripura state police ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை