×

அஞ்சுகிராமம் பேரூராட்சியில் சிறுமின்விசை குடிநீர் திட்டம் திறப்பு

அஞ்சுகிராமம், செப்.20 : அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவசுப்பிரமணிய புரத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பொது நிதியிலிருந்து ரூ.1.50 லட்சத்தில் புதிய சிறுமின்விசை குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.அதன் திறப்பு விழா செயல் அலுவலர் திலகம் தலைமையில், துணைத் தலைவர் காந்திராஜ் முன்னிலையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறுமின் விசை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூர் திமுக துணைச் செயலாளர் சொர்ணப்பன், ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சுயம்பு, தேவப்பூ, லெட்சுமி, சந்திரன், ரஜீஸ், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அஞ்சுகிராமம் பேரூராட்சியில் சிறுமின்விசை குடிநீர் திட்டம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Anjugram ,Sivasubramanya Puram ,
× RELATED ரோகிணி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்