×

மானூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து

மானூர்,செப் 16: மானூர் அடுத்த சேதுராயன்புதூர் விலக்கு அருகே நேற்று மதியம் 2 மணியளவில் சங்கரன்கோவிலிலிருந்து அரசு பஸ் ஒன்று நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை கங்கைகொண்டான் துறையூரை சேர்ந்த அலெக்சாண்டர் (55) என்பவர் ஓட்டிவந்தார். முன்னால் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் நடத்துனர் முருகன் (49), பயணிகள் மரிய சுபினா(25), அவரது மகள் 4 மாத குழந்தை மற்றும் சிலர் லேசான காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post மானூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Manoor ,Shankaran temple ,Seturayanputur ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு