×

ஆந்திராவில் கார், வேன், பைக் மீது லாரி மோதல் அதிகாலை விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

*காஞ்சிபுரத்தை சேர்ந்தவரும் சாவு

திருமலை : ஆந்திராவில் அதிகாலை கார், வேன், பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து, சித்தூர் மாவட்டம் நகரி நோக்கி சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு லாரி டிரைவர் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நகரி மண்டலம் தர்மபுரம் கிராமம் அருகே லாரி சென்றபோது, டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. மேலும், தேசிய நெடுஞ்சாலையோரம் வெள்ளை நிற கோடு போடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீதும், அவர்களது மினி லோடு வேன் மீதும் லாரி பயங்கரமாக மோதியது. இதனால் டிரைவர் லாரியை திருப்ப முயன்றார். அப்போது எதிரே வந்த கார், பைக் மீதும் லாரி மோதியது.

இதில் பைக்கில் வந்து கொண்டிருந்த மிடப்பள்ளியை சேர்ந்த பூபாலன்(29), அவரது குழந்தைகள் மித்தின்(6), உமேஷ்(3) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பூபாலனின் மனைவி படுகாயமடைந்தார். இதேபோல் காரில் வந்து கொண்டிருந்த தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணன்(40) என்பவர் பலியானார். மேலும் பூபாலனின் மனைவி உட்பட 11 பேர் விபத்தில் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 4 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். தொடர்ந்து நகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் வேன், கார், பைக் மீது லாரி மோதி 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஆந்திராவில் கார், வேன், பைக் மீது லாரி மோதல் அதிகாலை விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Sawu Tirumala, Kanjipuram ,Andhra ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...