×

முத்துப்பேட்டை அருகே குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி தீவிரம்

முத்துப்பேட்டை, செப். 4: முத்துப்பேட்டை அருகே பின்னத்தூர் ஊராட்சி செறுபனையூரில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி நடைபெற்றது.முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஊராட்சி செறுபனையூர் கிராமத்தில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்ததால் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. மேலும் ஊராட்சி சார்பில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, அந்த பகுதியில் உள்ள குடிநீர் டேங்க் முதல் குடியிருப்பு பகுதி வரை புதியதாக குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகளை ஊராட்சி தலைவர் டிஜி.ராஜேந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகள் தரமுடன் நடைபெற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

The post முத்துப்பேட்டை அருகே குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Muthupet ,Muthuppet ,Pinnathur panchayat Cherupanayur ,Pinnathur ,Dinakaran ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்