×

சிந்தாமணிப்பட்டி அருகே வீட்டில் இருந்த வாலிபர் மாயம்

தோகைமலை, செப். 4: கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி காவல்சரகம் மத்தகிரி ஊராட்சி முருகேசன் என்பவர் மகன் குரு( 21). கொத்தனார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று குரு வீட்டில் இருந்து உள்ளார். அப்போது திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு குருவின் பெற்றோர் முருகன் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரும் சென்று உள்ளனர். பின்னர் அன்று இரவு வீட்டிற்கு பெற்றோர் வந்து பார்த்த போது குருவை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் குரு கிடைக்கவில்லை. இது குறித்து குருவின் தந்தை முருகன் சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாயமான கொத்தனார் குருவை தேடி வருகின்றனர்.

The post சிந்தாமணிப்பட்டி அருகே வீட்டில் இருந்த வாலிபர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Chintamanipatti ,Tokaimalai ,Guru ,Karur district ,Madtagiri parish Murugesan ,Chindamanipatti ,Dinakaran ,
× RELATED குருவும் திருவும்