×

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே நடுப்பாளையத்தில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று மாதத்தில் 24 மாவட்டங்களில் தரைவழி பயணமாக 8,300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அனைத்து மாவட்டம் மற்றும் அனைத்து கிராம மக்களை சந்தித்து பேசி இருக்கிறேன். தங்களுடைய தேவைகளை மிகுந்த உணர்வுப்பூர்வமாகவும் நாசூக்காகவும் மரியாதையாகவும் கூறினார்கள். அம்மாநிலம் உன்னதமான பொருளாதார வளர்ச்சிக்கு வரும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தலைத்தோங்க வேண்டுமென்றால் ஒரே நாடு ஒரே தேசம் வரவேண்டும். பொருளாதார வளர்ச்சி தடைகள் நீங்கி முன்னேற்ற பாதையில் செல்லும். ஒரே நாளில் அனைத்து தேர்தல்களும் எம்பி, எம்எல்ஏ, ஊராட்சி மன்றம் வரை வைத்தால் தேர்தல் முடிந்து விடும். நீட்டை ஒழிக்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றம்தான் செல்ல வேண்டும். அரசின் சாசனத்திற்கு உட்பட்டு அனுப்பப்படுகின்ற தீர்மானங்கள் நிச்சயமாக ஆளுநரின் ஒப்புதலை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Governor ,CP Radhakrishnan ,Modakurichi ,CB Radhakrishnan ,Nadupalayam ,Kodumudi, Erode District ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...