×

வாலிபர் சுட்டுக்கொலை: ஒன்றிய அமைச்சரின் மகன் மீது வழக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச லக்னோவின் மோகன்லால் கன்ச் மக்களவை தொகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவுஷால் கிஷோர் ஒன்றிய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் விகாஸ் கிஷோரின் லக்னோ வீட்டில் அவரது நண்பர் வினய் வத்சவா நேற்று முன்தினம் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் மகன் விகாஸ் கிஷோர் மீது ஆயுத சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post வாலிபர் சுட்டுக்கொலை: ஒன்றிய அமைச்சரின் மகன் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Union ,Lucknow ,Parliament ,Mohanlal Kanch Lok Sabha Constituency ,Uttar Pradesh ,Kaushal Kishore Union Housing Facility ,
× RELATED லக்னோ மக்களவைத் தொகுதியில்...