×

கூலித் தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல், ஆக. 31: திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டி புளியராஜாக்காபட்டியை சேர்ந்தவர் பிரசாத் (30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவசங்கரி (22). இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பிரசாத் உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். ஆனால், நோய் முற்றிலும் குணமாகாததால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, பிரசாத் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூலித் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Prasad ,Puliyarajakkapatti, Kuttathuppatti ,Sivasankari ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...