இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான தோஷகானா ஊழல் வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இம்ரான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி அமீர் பாருக் அமர்வு நாளை (இன்று) காலை தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 22ம் தேதி விசாரணைக்கு பின், 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post இம்ரான் மீதான தோஷகானா வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.
