×

குழந்தைகளுடன் காலை உணவு சேடபாளையம் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம்

 

பல்லடம், ஆக.26: பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள 9 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1302 மாணவ,மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பல்லடம் சேடபாளையம் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழாவில் புதிய சமையல் கூட கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் நகராட்சி துணைத் தலைவர் நர்மதா இளங்கோவன், நகராட்சி கவுன்சிலர்கள் திணேஷ்குமார், ஈஸ்வரமூர்த்தி, வசந்தாமணி தங்கவேல், தண்டபாணி, பாலகிருஷ்ணன், ராஜசேகரன், நகர மதிமுக செயலாளர் வைகோ பாலு என்ற மா.பாலசுப்ரமணியம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், பல்லடம் நகர திமுக அவைத்தலைவர் நடராஜன், துணைச்செயலாளர் வேலுமணி, பொருளாளர் குட்டி பழனிசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கதிர்வேல்,

கெளஸ்பாஷா, வார்டு செயலாளர்கள் மார்க்கெட் தங்கவேல், ஜாகீர் உசேன், பிரகாஷ்,கயாஸ் அகமது, நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், ஹரி, திலீபன் பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, நகராட்சி பொறியாளர் சுகுமாரன்,வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்தியசுந்தரராஜ், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குழந்தைகளுடன் காலை உணவு சேடபாளையம் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Sedapalayam Govt School Breakfast ,Palladam ,Chief Minister ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...