×

கள்ளிக்குடி அருகே கார் மோதியதில் தச்சுத்தொழிலாளி பலி

திருமங்கலம், ஆக. 23: கள்ளிக்குடி அருகே நான்குவழிச்சாலையில் கார் மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளிக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் சரவணன்(42). தச்சுத்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கள்ளிக்குடியில் நான்குவழிச்சாலையை கடக்க முயன்ற போது விருதுநகரிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இது குறித்து சரவணனின் மனைவி சித்ராதேவி கொடுத்த புகாரில் கள்ளிக்குடி போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளிக்குடி அருகே கார் மோதியதில் தச்சுத்தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Carpenter ,Kallikudi ,Thirumangalam ,Annanagar ,Dinakaran ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி