×

பெரியபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

 

பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகன்பாபு(26). நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளிக்கு மோகன் பாபு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து மோகன்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே மோகன்பாபு மயங்கிய நிலையில் இருப்பதாக நினைத்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெரியபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Farmer Mohan Babu ,Pudupalayam ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்