×

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கிருஷ்ணகிரி, ஆக.17:கிருஷ்ணகிரி அணையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நேற்று ஆடி அமாவாசை என்பதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி விட்டு, கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில், ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மேலும், பசுக்களுக்கு அகத்தி கீரையை வழங்கினர்.

The post முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri dam ,Aadi Amavasi ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்