மதுரை: சுதந்திரம் பெற்று 75ஆண்டு ஆகியும் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பாகுபாடு காண்பிப்பது வேதனை என ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். ஒவ்வாரு வகுப்பினரும் தனித்தனியே மயானம்கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதி புகழேந்தி கூறினார். வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் லஜபதி ராயை நியமித்து உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இஸ்லாமியர் மயானத்தை அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பொதுவான மயானமாக பராமரிப்பது பற்றி பதிலளிக்க ஆணையிடப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் பராமரிப்பது பற்றி வக்பு வாரியம், ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post சுதந்திரம் பெற்று 75 ஆண்டு ஆகியும் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பாகுபாடு காண்பிப்பது வேதனை: ஐகோர்ட் கிளை நீதிபதி appeared first on Dinakaran.