×

வாடிப்பட்டியில் பெண் தற்கொலை

வாடிப்பட்டி, ஆக. 11: வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரேவதி சரண்யா (35). இவருக்கும் சென்னையை சேந்த இளையபெருமாள் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இளையபெருமாள் தற்போது அமெரிக்காவில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இதற்கிடையே ரேவதி சரண்யா கடும் மனஅழுத்தத்தில் இருந்ததால், அவரது தந்தை அவரை மதுரை தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக காண்பித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரேவதி சரண்யா தனது வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்து, எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாடிப்பட்டியில் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vadipatti ,Revathy Saranya ,Muthalamman Koil Street, Vadipatti Bodhinayakanpatti ,Chennai ,
× RELATED நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது