×

மாணவர் பலி

திருப்புவனம்: விருதுநகர் மாவட்டம், உச்சனேந்தலை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயராஜ் (14). இவர் அருகே உள்ள உளுத்திமடை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன் தினம் மாலை சிவகங்கை மாவட்டம் பழையனூரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா வாங்குவதற்கு டூவீலரில் புறப்பட்டு சென்றார். பழையனூர் அரசு மாணவர் விடுதி எதிரில் சென்றபோது, திடீரென நிலை தடுமாறி டூவீலரில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஜெயராஜ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழையனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Govindan ,Jayaraj ,Uchanendal, Virudhunagar district ,Ulutimadai ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...