×

விருத்தாசலத்தில் பரபரப்பு நண்பர் இறந்ததாக கூறி வாலிபர் மறியல்

விருத்தாசலம், ஆக. 9: விருத்தாசலத்தில் நெஞ்சுவலியால் வாலிபர் இறந்த விவகாரத்தில் ஆட்டோ டிரைவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை எனக்கூறி அவரது நண்பர் நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கம்பர் தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் மகன் சூர்யா (28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடைவீதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் கடைவீதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை அழைத்துள்ளனர். ஆனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த எந்த ஆட்டோவும் வராத நிலையில் மாற்று ஏற்பாடு செய்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சூர்யாவை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த சூர்யாவின் நண்பர் ஒருவர் கடைவீதியில் நடுரோட்டில் அமர்ந்து ஆட்டோ டிரைவர்களின் அலட்சியத்தால் தனது நண்பன் இறந்துவிட்டதாகவும், உடனடியாக ஆட்டோ வந்திருந்தால் நண்பனை காப்பாற்றி இருக்கலாம் எனவும் கூறி தனிநபராக மறியலில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

The post விருத்தாசலத்தில் பரபரப்பு நண்பர் இறந்ததாக கூறி வாலிபர் மறியல் appeared first on Dinakaran.

Tags : Virudhachalam ,Vridthachalam ,Vriddhachalam ,
× RELATED விருத்தாச்சலத்தில் வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளை!!