ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த மண்டபம் மீனவர்கள் 9 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் கடற்கரையில் இருந்து கடந்த ஜூலை 25ம் தேதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்றிரவு மீன் பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர், மீனவர்கள் நாகநாதன், வேலு ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளை சிறை பிடித்தனர். அந்த படகுகளில் இருந்த மீனவர்கள் 9 பேரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 9 பேரும் நேற்று காலை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்த நீதிபதி, மீனவர்கள் 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கை கடற்படை சிறைபிடித்த மண்டபம் மீனவர் 9 பேர் விடுதலை appeared first on Dinakaran.
