×

எம்கேபி நகர் பகுதியில் ஐடி இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன் கைது

பெரம்பூர்: எம்கேபி நகர் பகுதியில் ஐடி பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவனை கைது செய்த மகளிர் போலீசார், சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை 6 மணியளவில் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக செல்போனில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளான். இதனைக் கண்ட இளம் பெண் சத்தம் போடவே, அந்தச் சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், சிறுவனைப் பிடித்து விசாரணை செய்தபோது, சிறுவன் அந்த வீடியோவை தனது செல்போனில் டெலிட் செய்திருந்தான். இதனையடுத்து செல்போனில் அழித்த வீடியோக்கள் குறிப்பிட்ட பகுதியில் ஸ்டோரேஜ் ஆகியிருந்தது. போலீசார் அதனை கண்டுபிடித்து பார்த்தபோது அதில் இளம்பெண் குளிக்கும் வீடியோ இருந்தது.
இதனையடுத்து சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post எம்கேபி நகர் பகுதியில் ஐடி இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : MKP Nagar ,Perambur ,MKB Nagar ,Dinakaran ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...