×

திருமணமாகி 2 மாதத்தில் பெண் தற்கொலை

 

சத்தியமங்கலம், ஆக.7: சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அன்னையின் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (44). இவருக்கும், கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் கீர்த்தனா (23) என்பவருக்கும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 4 நாளுக்கு முன்பு ஆடி 18 பண்டிகைக்காக கார்த்தி, கீர்த்தனா இருவரும் கோவையில் உள்ள கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்று விட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் சத்தியமங்கலம் வந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் கீர்த்தனா சாணி பவுடர் குறித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கீர்த்தனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீர்த்தனாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி 2 மாதங்களை ஆகியுள்ளதால் இதுகுறித்து கோபி ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகாமின் நோக்கமானது, 1 முதல் 2 வயது, 2 வயதுக்கு மேற்பட்ட சரி வர தடுப்பூசி செலுத்த தவறிய, விடுபட்டுள்ள குழந்தைகளை கண்டறிந்து தடுப்பூசியை செலுத்துவதாகும். உரியகால கட்டத்தில் 13 வகையான தடுப்பூசி மருந்துகளை சரி வர செலுத்தி கொள்வதால் குழந்தைகளை பாதுகாத்து கொள்ள முடியும்.

The post திருமணமாகி 2 மாதத்தில் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Karthi ,Annai's East Road ,Sathyamangalam North Pettah ,Puliyakulam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை