![]()
தேன்கனிக்கோட்டை: கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில், காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது அருகில் உள்ள கிராம பகுதிகளுக்குள் செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், அய்யூர் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறிய ஒற்றை காட்டு யானை, அருகிலுள்ள மணியம்பாடி கிராமத்தில் வயல்வெளியில் சுற்றித்திரிந்தது. அங்கு தோட்டங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த விளை பயிர்களை யானை சேதப்படுத்தியது.
காட்டு யானை கிராம பகுதிகளில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஒற்றை காட்டு யானையால் அங்குள்ள மணியம்பாடி, பிக்கனப்பள்ளி, ஒட்டர் பாளையம் மற்றும் சாலிவாரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.
