×

பள்ளி கருத்தரங்கில் வலியுறுத்தல் ‘பேரிகார்டு’ திருடிய 2 பேர் கைது

 

பொன்னமராவதி,ஜூலை 29: பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் இருந்து பாலகுறிச்சி நெடுஞ்சாலைதார் ரோட்டில் இரும்பு தடுப்பு பேரிகார்டு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். அதனை கண்டுபிடித்து தறுமாறு காரையூர் காவல்நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் பெருமாள் புகார் செய்தார். அதன்பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காரையூர் சப்.இன்ஸ்பெக்டர் மதியழகன், ஏட்டு சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஆதினிப்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனை மறித்து விசாரணை செய்தபோது புதுக்கோட்டை பூசத்துறை ஆறுமுகம் மகன் முருகேசன்(54), திருவப்பூர் பொன்னப்பன் ஊரணி சீனிவாசன் மகன் மணிகண்டன்(21) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். வேனில் பேரிகார்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார், 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பேரிகார்டு மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

The post பள்ளி கருத்தரங்கில் வலியுறுத்தல் ‘பேரிகார்டு’ திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Palakurichi ,Karaiyur ,
× RELATED பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்