×

பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

பொன்னமராவதி, மே 14: பொன்னமராவதி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட மினிடிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம்-பேயால் ரோட்டில் உள்ள தரைப்பாலம் அருகே மணல் திருட்டில் ஈடுபடுவதாக காரையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து காரையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதை பார்த்த டிரைவர் மினிடிப்பர் வாரியை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். காரையூர் போலீசார் மினிடிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Karaiyur ,Melathaniam-Peyal road ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...