திருவையாறு, ஜூலை 28: திருவையாறு பேருந்துநிலையத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழு சுகாதாரத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். ரேவதி கிராமிய கலைக் குழுவினர் நடனம், நகைச்சுவை, நாடகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சி மூலம் முழுசுகாதாரம் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தி கலை வடிவில் மக்களுக்கு எடுத்து கூறினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சுந்தர், துப்புரவு மேற்பார்வையாளர் முருகன், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியை கண்டுகழித்தனர்.
The post திருவையாறு பஸ் நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி appeared first on Dinakaran.