×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

உத்தமபாளையம், ஜூன் 17: உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி துர்க்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் மணிமுருகன் (26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமான 3 நாட்களில், மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால், மனைவி பிரிந்து சென்றதால் மணிமுருகன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, மாடியில் உள்ள அறையில் மணிமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ராயப்பன்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் மணிமுருகனின் உடலை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், மணிமுருகன் இறப்பிற்கு வேறு காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Uthamapalayam ,Manimurugan ,Sunderam ,Animalayanpatti Turkarayamman Temple Street ,
× RELATED புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது அதிமுக