×

தெலங்கானா சூர்யாபேட்டையில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் 500 அடி உயர லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் பலி

*உபி, பீகாரை சேர்ந்தவர்கள்

திருமலை : தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள மேலச்செருவில் தனியார் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக, 500 அடி உயரத்தில் கான்கிரீட் வேலையை ஏராளமான கூலித்தொழிலாளர்கள் நேற்று காலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ​​லிப்ட் திடீரென அறுந்து கீழே விழுந்தது.

இதில், வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த சூர்யாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கான்கிரீட் வேலையை ஏராளமான தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக லிப்ட் திடீரென அறுந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இறந்தவர்கள் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள். இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது சரியான தகவல் இல்லை’ என்றனர்.

The post தெலங்கானா சூர்யாபேட்டையில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் 500 அடி உயர லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Suryabet, Telangana ,Ubi, Bihar, Thirumalai ,Melacheru, Suryapetta District, Telangana State ,
× RELATED மேற்குவங்கத்தில் ஒபிசி சான்றிதழ்கள்...