×

ஆம்புலன்ஸ் இல்லாததால் டுவீலரில் உடலை எடுத்து சென்ற அவலம்

கட்சிரோலி: மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் பாம்ரகத் தாலுக்கா கிருஷ்ணர் கிராமத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜூலை 20ம் தேதி அந்த இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்ல தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் அல்லது அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இறந்த இளைஞரின் உடலை அவரது குடும்பத்தினர் மரக்கட்டிலுடன் இணைத்து கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து சென்றுள்ளனர்.

The post ஆம்புலன்ஸ் இல்லாததால் டுவீலரில் உடலை எடுத்து சென்ற அவலம் appeared first on Dinakaran.

Tags : Katchiroli ,Krishnar ,Bamragat taluka, Katchiroli district, Maharashtra ,Avalam ,
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி