×

பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

விக்கிரவாண்டி, ஜூலை 25: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் சென்றது. அப்போது, சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதியது. இதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் பாப்பனப்பட்டு பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் பழனிச்சாமி (45) என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Villupuram district ,Mundiambakkam ,Government Medical College Hospital ,Chennai ,Dinakaran ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...