×

மூதாட்டி அடித்து கொலை?

திட்டக்குடி, மே 16: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள வதிஷ்டபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஆனந்தன் மனைவி மகாலட்சுமி(40). இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் முருகன்(45) என்பவருக்கு 2020ம் ஆண்டு ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்தை கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்திற்கு முருகன் அசல் மற்றும் வட்டியை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் அவ்வப்போது மகாலட்சுமி, அவரது தந்தை செல்வமணி(60) என்பவருடன் முருகனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு முருகன் பணம் கொடுக்காத நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் மகாலட்சுமி, அவரது தந்தை, தம்பி தர்மராஜ் (38), தாய் மலர் (55) ஆகியோருடன் சென்று முருகன், இவரது மனைவி ராஜேஸ்வரி (41) ஆகியோரிடம் பணம் கேட்டுள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மகாலட்சுமியின் தாய் மலர் நேற்று முன்தினம் இரவு திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிந்து, முருகன், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே தகராறில் படுகாயம் அடைந்து உயிரிழந்தாரா? என்பது தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post மூதாட்டி அடித்து கொலை? appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Anandan ,Mahalakshmi ,Vathishtapuram ,Cuddalore district ,Lakshmanan ,Murugan ,
× RELATED அகரம்சீகூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை