×

பாஜ.வில் இருந்து விலகி மீண்டும் காங்.கில் இணைந்தார் அமுல் நிறுவன இயக்குநர்

அகமதாபாத்: அமுல் நிறுவன இயக்குநர் ஜூவான் சிங் சவுகான் பாஜ.வில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அமுல் பால்வளப் பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநர் ஜூவான் சிங் சவுகான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்தார். இந்நிலையில், அவர் தற்போது தனது ஆதரவாளர்களுடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோகிலை சந்தித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். இது குறித்து சக்திசிங் கூறுகையில், ‘’பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் மத்தியில், மாநிலத்தில் ஆளும் பாஜ அரசின் தலையீடு அதிகரித்து வருவதால் அதில் இருந்து வெளியேறி அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளேன்,’’ என்று தெரிவித்தார்.

The post பாஜ.வில் இருந்து விலகி மீண்டும் காங்.கில் இணைந்தார் அமுல் நிறுவன இயக்குநர் appeared first on Dinakaran.

Tags : Amul ,BJP ,Congress ,AHMEDABAD ,Juwan Singh Chouhan ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல்...