×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

 

திருமங்கலம், ஜூலை 17: திருமங்கலம் அருகேயுள்ள அழகுசிறை கிராமத்தில் சிந்துபட்டி எஸ்.ஐ மாரியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் டூவீலரில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 700 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், அழகுசிறையை சேர்ந்த சிவக்குமார்(42), பொட்டல்பட்டியை சேர்ந்த செல்வம் (29) ஆகிய அவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர், அவர்களிடம் இருந்த கஞ்சா, டூவீலர் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Sindhupatti S.I. Mariyappan ,Akkusirai ,Tirumangalam.… ,Dinakaran ,
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...