நத்தம், ஜூலை 15: நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா அருகில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் கலிபுல்லா தலைமை வகிக்க, நகர பொருளாளர் முகமது உசேன், துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சில்லி சேட் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதில் மாநில செயலாளர் ஜமால் முகமது, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன், சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின், ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் யூசுபி, கட்சி நிர்வாகிகள் அப்துல் ஹாலிக், ஜாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர செயலாளர் நாசர் முகமது நன்றி கூறினார்.
The post நத்தத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.