ராஜபாளையம், ஜூலை 15: ராஜபாளையம் ராமச்சந்திர ராஜா குருகுலத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகவும், தாத்தா பாட்டியர் தினமாகவும் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குருகுல தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா முன்னிலை வகித்தார். விழாவில், மாணவ மாணவியர்களிடையே காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிய பேச்சுப்போட்டிகள் மற்றும் மாறுவேட போட்டிகள் நடைபெற்றன.
அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தாளாளர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில், மாணவ, மாணவியர்கள் தங்களின் தாத்தா, பாட்டி ஆகியோரிடம் காலில் விழுந்து வணங்கி பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துக்களை பெற்றனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குநர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் இறுதியாக மாணவர்கள் தாத்தா, பாட்டிக்கு இனிப்புகள் வழங்கினர்.
The post காமராஜர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.