×

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

 

சேலம், ஜூலை 15: சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கடந்த 2014ம் ஆண்டு இவரை, 4 பேர் சேர்ந்து கடுமையாக தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிகரன்(34) உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் இருக்கும் போது, ஒருவர் உயிரிழந்து விட்டார். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் தங்ககார்த்திகா, வாலிபர் ஹரிகரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹1000 அபராதமும் வித்தது தீர்ப்பு கூறினார். மற்ற 2 பேரை விடுதலை செய்தார்.

The post வாலிபருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Salem ,Subramani ,Mariamman Kovil Street ,Manakkad ,Astampatty ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்