×

பதுக்கல் மது, புகையிலை விற்ற பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது

மதுரை, ஜூலை 10: மதுரையில் மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை எஸ்.எஸ்.காலனி, செல்லூர், கூடல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நேற்று, முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்ேபாது அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 9 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 76 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், எஸ்.எஸ்.காலனி மற்றும் கரிமேடு பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில், சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதனையடுத்து கடைகளிலிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இவற்றை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களான பாத்திமா நகரை சேர்ந்த மாயி(68), காளவாசலை சேர்ந்த சண்முகக்கனி மனைவி சுப்புலெட்சுமி(60), சுரேந்தர் மனைவி கார்த்தீஸ்வரி(36) மற்றும் லெட்சுமணன் மனைவி பாண்டியம்மாள்(60) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

The post பதுக்கல் மது, புகையிலை விற்ற பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...