×

கஞ்சா வியாபாரிக்கு கத்திக்குத்து

 

அண்ணாநகர், ஜூலை 10: நெற்குன்றம் சக்திநகர் 15வது தெருவில் நேற்று முன்தினம் ஒரு வாலிபரை பட்டப்பகலில் நடுரோட்டில் ஒட ஒட விரட்டி சென்று 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டி (23) என்பதும், இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து, வாலிபரை குத்திய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

The post கஞ்சா வியாபாரிக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Annanagar ,15th Street ,Nelkurunram Shaktinagar ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...