×

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

கருங்கல், ஜூலை 4: பேச்சிப்பாறை பிரதான கால்வாயில் இருந்து பட்டணம் கால்வாய்க்கு தண்ணீர் வரக்கூடிய சாமியார்மடம் பிரதான கால்வாய் பகுதியில் சுமார் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பட்டணம் கால் கடை வரம்பு நிலங்களுக்கு தண்ணீர் வராமல் இருந்தது. சாமியார் மடத்தில் ஒரு பகுதியில் 60 அடி நீளத்துக்கு 2 பக்கங்களிலும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்த பகுதியில் கான்கிரீட்டால் தடுப்பு சுவர் மற்றும் மூடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மிடாலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் கீழ்குளம் கோபால், கீழ் மிடாலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் துரைராஜ் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணியை வேகமாக முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

The post மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Karungal ,Samiyarmadam ,Pachiparai ,Pattanam ,Dinakaran ,
× RELATED பேச்சிப்பாறையில் படகில் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள்