×

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 11ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜூலை 11 முதல் விசாரிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஒன்றிய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மனு இத்தனை ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு ஜூலை 11ம் தேதி முதல் விசாரிக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மனு மீதான விசாரணையை நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

The post காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 11ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,Chandrasoot ,Jammu ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...