×

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பொன்னுசாமி எம்எல்ஏ பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். கொல்லிமலை ஒன்றியம், வாழவந்திநாடு ஊராட்சி கீழ் சோளக்காடு பகுதியில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடந்தது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியை பொன்னுசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார். பரிசளிப்பு விழாவிற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுத் தொகை, வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். சிறந்த மட்டையாளர்களுக்கும் பரிசுத் தொகை, பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் வசந்தி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபாகரன், திமுக நிர்வாகிகள் சத்யராஜ், சுதா வெங்கடேஷ், அமிர்தராஜ், சின்னத்தம்பி, ஜெயக்குமார், மனோகரன், அருள்ராஜ், தியாகராஜன், முருகேசன், ராஜ்குமார் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Ponnusamy ,MLA ,Kollimalai ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்