×

12 மத்திய சிறைகளில் தயாரிக்கும் 57 பொருட்களுக்கான சிறை சந்தை விற்பனை நிலையம் திறப்பு: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள 12 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் 57 வகையான பொருட்களை விற்பனை செய்யும் வகையில், எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் ‘சிறை சந்தை’ என்ற பெயரில் புதிய விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். இந்த விற்பனை நிலையத்தில், சமையல் எண்ணெய், வீட்டு உபயோக பொருட்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணிகள், திருநெல்வேலி அல்வா, கடலை மிட்டாய், இட்லி பொடி என 57 வகையான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறைவாசிகள் தயாரிப்பதால் இது வெளிச்சந்தையை விட மிக குறைந்த விலையில் உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாளர்களுக்காக நவீன உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். சிறைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், சிறை நிர்வாகம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் சிறைவாசிகளின் படைப்புகளை உள்ளடக்கமாக கொண்ட ‘சிறகிதழ்’ என்ற மாத இதழும் வெளியிடப்பட்டது.

The post 12 மத்திய சிறைகளில் தயாரிக்கும் 57 பொருட்களுக்கான சிறை சந்தை விற்பனை நிலையம் திறப்பு: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Market ,12 Central Jails ,Minister ,Raghupathi ,Chennai ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள்...