- இரயில்
- சிபிஐ
- விகாஸ் நிகோம் லிமிடெட்.
- புது தில்லி
- ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட்
- விகாஸ் நிகோம் லிமிடெட்
- தின மலர்
புதுடெல்லி: ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்டின் முன்னாள் தலைவர் மீதான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு மூடப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்டின் (ஆர்விஎன்எல்) முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்த சதிஷ் அக்னிேஹோத்திரி கடந்த 2021ம் ஆண்டு புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் தேசிய அதிவேக ரயில்வே கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இவர் ஊழல் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் சதீஷ் அக்னிஹோத்ரி மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் எனவே வழக்கை கைவிடுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முன்னாள் தலைவர் மீதான சிபிஐ வழக்கு ரத்து appeared first on Dinakaran.