×

தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

சேலம்: சேலம் இரும்பாலை பக்கமுள்ள மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்(24). கட்டிட தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் பர்ன்அன்கோ அருகில் காட்டுப்பக்கம் ஒதுங்கினார். அப்போது திடீரென அங்கு வந்த 3 பேர், அவரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். தலையில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinesh ,Mallamooppatti ,Salem Irumpalai ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்