×

காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

 

கோபி,ஜூன்20: கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் பசுபதி(25). ஆட்டோ டிரைவர்.சிறுவலூர் அருகே உள்ள குட்டைபாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மூர்த்தி மகள் முருகவேணி(19). பனியன் கம்பெனி தொழிலாளி. உறவினர்களான இருவரும் கடந்த 2 ஆண்டு காதலித்து வந்தனர்.காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும், எதிர்ப்பு கிளம்பியது.அதைத்தொடர்ந்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மொடச்சூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

The post காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Gopi ,Palanichami ,Pasupathi ,Kullampalayam Periyar ,Siruvalur ,
× RELATED பெண் ஆய்வாளரை தவறாக பேசிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!!