×

அமமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத அமமுக நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கெசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(39). இவர் அமமுக கட்சியில் மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதனிடையே, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வராமல் இருந்ததால் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் அளித்த நிலையில் நேற்று கே‌.வி.குப்பம் போலீசார் பிரதிப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், கடந்த 2016ம் ஆண்டு நீலகண்டபாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(45), மணல் கடத்திய வழக்கில் கோர்டில் ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கே.வி.குப்பம் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

The post அமமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத appeared first on Dinakaran.

Tags : AAMUK ,KV Kuppam ,AMU ,Vellore ,AAM MUK ,Dinakaran ,
× RELATED ரம்ஜான் நெருங்கும் நிலையில்...