×

ஆட்டோவிற்கு நள்ளிரவில் தீ வைப்பு

அழகர்கோவில், ஜூன் 19: அழகர்கோவில் அருகே பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அழகர்கோவிலில் சொந்த ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தியிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் அவரது ஆட்டோ மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ஆட்டோ மளமளவென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதைப்பார்த்த டிரைவர் ரமேஷின் தந்தை கூச்சல் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு ரமேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதைப்பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். பின்னர் அவர்கள் தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்துள்ளனர். ஆனால் அதற்குள் அதன் பெரும் பகுதி எரிந்துபோனது. இதுகுறித்து அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார்.

அதில் தனது ஆட்டோவிற்கு தீ வைத்தது அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்றும், அவரது டூவீலரை சம்பவ இடத்திலேயே விட்டுச்சென்றதையும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அனாதையாக நின்றிருந்த சசிகுமாரின் டூவீலரை கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சசிகுமாரை தேடி வருகின்றனர். பொய்கைக்கரைப்பட்டியல், நள்ளிரவில் ஆட்டோவிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆட்டோவிற்கு நள்ளிரவில் தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Alagharkoil ,Ramesh ,Poikaikaraipatti ,Alagharkovil ,Dinakaran ,
× RELATED நண்பர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளி