×

பாடாலூர் அருகே கிணற்றில் முதியவரின் சடலம்

பாடாலூர், ஜூன் 18: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவிளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (84). இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரது கிணற்றில் சடலமாக மிதந்தது நேற்று தெரிய வந்தது. இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாடாலூர் அருகே கிணற்றில் முதியவரின் சடலம் appeared first on Dinakaran.

Tags : Padalur ,Kaliamoorthy ,Thiruvilakurichi ,Aladhur taluka ,Perambalur district ,Badalur ,
× RELATED பாடாலூர் செல்லியம்மன் கோயிலில் முள் படுகளம் நிகழ்ச்சி